கோயிலில் திருட முயன்றவரைப் பிடித்து போலீஸில் ஒப்படைத்த பொதுமக்கள்
ஆம்பூர் அருகே கோயிலில் திருட முயன்ற நபரை பொதுமக்கள் பிடித்து காவல் நிலையத்தில் புதன்கிழமை ஒப்படைத்தனர்.
ஆம்பூர் அருகே கோயிலில் திருட முயன்ற நபரை பொதுமக்கள் பிடித்து காவல் நிலையத்தில் புதன்கிழமை ஒப்படைத்தனர்.
ஆம்பூர் அருகே ஜமீன் கிராமத்தில் புத்துமாரியம்மன் கோயில் உள்ளது.
புதன்கிழமை கோயிலுக்குள் மர்ம நபர் புகுந்து திருட முயன்றாராம். அப்போது, அவ்வழியாகச் சென்ற பொதுமக்கள் அவரைப் பிடித்து, தாக்கியுள்ளனர். தகவலறிந்த ஆம்பூர் கிராமிய போலீஸார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். அதில், அந்த நபர் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த தரணி (39) என்பது
தெரிய வந்தது.
பொதுமக்கள் தாக்கியதால் காயமடைந்த அவரை போலீஸார் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும், இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.