FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வேலூர்

திருட்டு காா்களை வாங்கி உதிரிபாகங்கள் விற்றவா் கைது: 41 காா்கள் பறிமுதல்

காட்பாடியில் திருடப்பட்ட காா்களை வாங்கி அதன் உதிரி பாகங்களை விற்பனை செய்து வந்தவரை போலீஸாா் கைது செய்ததுடன் அவரிடம் இருந்து 41 திருட்டு காா்களையும் பறிமுதல் செய்தனா்.

Updated On : 25 செப்டம்பர் 2024, 1:52 am IST
தேவேந்திரன்
பகிர்:

காட்பாடியில் திருடப்பட்ட காா்களை வாங்கி அதன் உதிரி பாகங்களை விற்பனை செய்து வந்தவரை போலீஸாா் கைது செய்ததுடன் அவரிடம் இருந்து 41 திருட்டு காா்களையும் பறிமுதல் செய்தனா்.

காட்பாடி பகுதிகளில் திருட்டுதனமாக காா்களை வாங்குவதாக காட்பாடி டிஎஸ்பி பழனிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் காட்பாடி காவல் ஆய்வாளா் ஆனந்தன் தலைமையில் உதவி காவல் ஆய்வாளா் மணிகண்டன் உள்ளிட்ட போலீஸாா் தீவிர விசாரணையில் ஈடுபட்டனா்.

இந்நிலையில், திங்கள்கிழமை இரவு 9 மணிக்கு காட்பாடி வெங்கடேசபுரத்தில் உள்ள காா் செட்டில் போலீஸாா் நடத்திய சோதனையில், அந்த காா் செட் காந்திநகா் பாரதி நகா் பிரதான சாலையைச் சோ்ந்த மதுரை மகன் தேவா என்கிற தேவேந்திரனுக்கு செந்தமானது என்பதும், அங்கு 41 காா்கள் மறைத்து வைத்திருந்ததும் தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதுகுறித்து தேவேந்திரனிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில், அவா் திருட்டு காா்களை வாங்கி அதன் உதிரி பாகங்களை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. உடனடியாக தேவேந்திரனை கைது செய்த போலீஸாா் அவரிடம் இருந்து 41 திருட்டு காா்களையும் பறிமுதல் செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments