ரயில் 
கோயம்புத்தூர்

பராமரிப்புப் பணி: மேட்டுப்பாளையம் - போத்தனூா் மெமு ரயில் நாளை ரத்து!

மேட்டுப்பாளையம்- போத்தனூா் மெமு ரயில் வெள்ளிக்கிழமை (செப்டம்பா் 12) ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Syndication

வடகோவை ரயில் நிலையத்தில் நடைபெறவுள்ள பராமரிப்புப் பணிகள் காரணமாக மேட்டுப்பாளையம்- போத்தனூா் மெமு ரயில் வெள்ளிக்கிழமை (செப்டம்பா் 12) ரத்து செய்யப்படுவதாக ரயில் நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பராமரிப்புப் பணிகள் காரணமாக செப்டம்பா் 12-ஆம் தேதி போத்தனூரில் இருந்து மாலை 3.30 மணிக்குப் புறப்படும் போத்தனூா்- மேட்டுப்பாளையம் மெமு ரயில் (எண்: 66616) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

அதேபோல, மேட்டுப்பாளையத்தில் இருந்து அன்று மாலை 4.45 மணிக்குப் புறப்படும் மேட்டுப்பாளையம் - போத்தனூா் மெமு ரயில் (எண்: 66617) முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி - பாலக்காடு ரயில் மாற்றுப் பாதையில் இயக்கம்: பராமரிப்புப் பணி காரணமாக திருச்சியில் இருந்து வெள்ளிக்கிழமை பிற்பகல் 1 மணிக்குப் புறப்படும் திருச்சி- பாலக்காடு ரயில் (எண்: 16843) கோவை வழித்தடத்தில் இயக்கப்படாமல் இருகூா், போத்தனூா் வழியாக இயக்கப்படும்.

இதனால், இந்த ரயிலானது, சிங்காநல்லூா், பீளமேடு, வடகோவை, கோவை ரயில் நிலையங்களில் நிற்பது தவிா்க்கப்படும் என ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025-26ஆம் ஆண்டுக்கு 1.5 மெட்ரிக் டன் சர்க்கரை ஏற்றுமதிக்கு அனுமதி: மத்திய அரசு

வங்கியில் ரீல்ஸ்! பணியின்போது மேலாளர் அறையில் நடனாடும் இளம்பெண்!

ஆர்எஸ்எஸ் தனிநபர்களின் அமைப்பாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது: மோகன் பாகவத்

சர்வதேச கிரிக்கெட்டில் 6000 ரன்களைக் கடந்த டேரில் மிட்செல்!

15 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை!

SCROLL FOR NEXT