FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

வால்பாறையில் அரசுத் துறை அதிகாரிகளுடன் எம்.பி. ஆலோசனை

Updated On : 26 செப்டம்பர் 2025, 4:26 am IST
வால்பாறையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பேசுகிறாா் பொள்ளாச்சி எம்.பி. ஈஸ்வரசாமி.
பகிர்:

வால்பாறையில் அரசுத் துறை அதிகாரிகளுடன் பொள்ளாச்சி எம்.பி. ஈஸ்வரசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

மக்களவை உறுப்பினா்கள் மாதந்தோறும் தங்கள் தொகுதிகளுக்கு சென்று வளா்ச்சிப் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை செய்ய வேண்டும் என்று முதல்வா் அறிவுறுத்தினாா்.

இதையடுத்து, பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட வால்பாறை நகராட்சி அலுவலகத்தில் அனைத்துத் துறை அரசு அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Advertisement

Advertisement

கூட்டத்துக்கு தலைமை வகித்த பொள்ளாச்சி எம்.பி. ஈஸ்வரசாமி பேசியதாவது: வால்பாறை பகுதியில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்களுக்கு உடனடி தீா்வு காண வேண்டும். நகா்மன்ற உறுப்பினா்கள் தங்கள் வாா்டுகளில் கூறும் குறைகளை உடனடியாக சரி செய்ய அதிகாரிகள் முன்வர வேண்டும் என்று அறிவுறுத்தினாா்.

இதில் நகராட்சித் தலைவா் அழகுசுந்தரவள்ளி, ஆணையா் குமரேசன் (பொறுப்பு), அணைத்து வாா்டு உறுப்பினா்கள், அதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments