புயல் பாதிப்பு: லிட்ரசி பள்ளி சார்பில் நிவாரணப் பொருள்கள் அனுப்பிவைப்பு
சூலூர் அருகே உள்ள லிட்ரசி பள்ளி மாணவர்கள் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ. 2.5 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருள்களை அனுப்பிவைத்தனர்.
சூலூர் அருகே உள்ள லிட்ரசி பள்ளி மாணவர்கள் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ. 2.5 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருள்களை அனுப்பிவைத்தனர்.
சூலூர் அருகே சாமளாபுரத்தில் உள்ள லிட்ரசி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சார்பில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ரூ. 2,50,000 மதிப்பிலான நிவாரணப் பொருள்கள் சேகரிக்கப்பட்டன. பாய், குடம், உணவுப் பொருள்கள், மருந்துகள் உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை அனுப்பிவைக்கும் நிகழ்வில் பள்ளித் தலைவர் எம்.சுப்பிரமணியம், முதல்வர் சிவகாமி, பள்ளி அறங்காவலர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர். இந்த நிவாரணப் பொருள்கள் தமிழக அரசின் மூலமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் என பள்ளித் தலைவர் எம்.சுப்பிரமணியம் தெரிவித்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.