கோவையில் சமுதாய காவல் பயிற்சி முகாம்
கோவை மாநகர காவல் துறை, பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் ஆகியன இணைந்து நடத்திய சமுதாய காவல் பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
கோவை மாநகர காவல் துறை, பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் ஆகியன இணைந்து நடத்திய சமுதாய காவல் பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள கருத்தரங்கு கூடத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மாநகர காவல் துணை ஆணையர் (தலைமையிடம் ) ஜி.தர்மராஜன் தலைமை வகித்தார். இந்த பயிற்சி முகாமை காவல் ஆணையர் கு.பெரியய்யா தொடக்கி வைத்தார். இதில், கோவை மாநகர காவல் எல்லைக்கு உள்பட்ட 15 காவல் நிலையங்களில் காவலர்களுக்கு உதவியாக உள்ள பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் குழுவைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோருக்கு சென்னையைச் சேர்ந்த சினேகா பெர்ணான்டஸ், செபாஸ்டியன் பால்ராஜ் ஆகியோர் பயிற்சி அளித்தனர். இதையடுத்து, பயிற்சியின் முடிவில் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதில், ரூட்ஸ் நிறுவனங்களின் இயக்குநர் கவிஞர் கவிதாசன், துணை ஆணையர்கள் பி.பெருமாள், சுஜித்குமார், பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் ஒருங்கிணைப்பாளர் எஸ்.செந்தில்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.