கோவையில் வழக்குரைஞர்கள் நீதிமன்றப் புறக்கணிப்பு போராட்டம்
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து கோவையில் வழக்குரைஞர்கள் நீதிமன்றப் புறக்கணிப்பு போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனர்.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து கோவையில் வழக்குரைஞர்கள் நீதிமன்றப் புறக்கணிப்பு போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனர்.
கோவை வழக்குரைஞர் சங்க அவசர பொதுக் குழுக் கூட்டம், அதன் தலைவர் பாலகிருஷ்ணன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. அப்போது, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தைப் புறக்கணித்து போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. மேலும், இதுதொடர்பாக நீதிமன்ற வளாகம் முன்பு வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது. வழக்குரைஞர்கள் நீதிமன்றத்தை புறக்கணித்தால் வழக்கு விசாரணைகள் வியாழக்கிழமை பாதிக்கப்பட்டன.
செயற்குழு கூட்டத்தில் துணைத் தலைவர் மனோகரன், செயலாளர் சதீஷ், பொருளாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.