மதுக்கரை அருகே சாலையில் பள்ளம்
மதுக்கரை-சுந்தராபுரம் சாலையில் ஏற்பட்டுள்ள பெரிய பள்ளத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுக்கரை-சுந்தராபுரம் சாலையில் ஏற்பட்டுள்ள பெரிய பள்ளத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுக்கரை-சுந்தராபுரம் சாலையில், காமராஜ் நகர் அருகில், சாலையின் மையப் பகுதியில் அபாயகரமான பள்ளம் ஏற்பட்டுள்ளது. இருசக்கர வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள் அதிக அளவில் செல்லக்கூடிய இந்த சாலையின் நடுவில் ஏற்பட்டுள்ள பள்ளத்தால் விபத்துகள் ஏற்படும் அபாயம் நிலவி வருகிறது.
குறிப்பாக இரவு நேரங்களில் வரும் வாகனங்களுக்கு பள்ளம் இருப்பது தெரிவதில்லை. எனவே, உடனடியாக இந்த சாலையை சீரமைத்து தர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.