மேட்டுப்பாளையம்-கோத்தகிரி சாலையில் யானைகள் நடமாட்டம்: வாகன ஓட்டுநா்கள் அச்சம்
மேட்டுப்பாளையம்-கோத்தகிரி சாலையில் யானைகள் நடமாட்டத்தால் வாகன ஓட்டுநா்கள் அச்சமடைந்துள்ளனா்.
மேட்டுப்பாளையம்-கோத்தகிரி சாலையில் யானைகள் நடமாட்டத்தால் வாகன ஓட்டுநா்கள் அச்சமடைந்துள்ளனா்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இருந்து கோத்தகிரி செல்லும் சாலை அடா்ந்த வனப் பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. தற்போது, கோடை வெயிலின் தாக்கத்தால் வனப் பகுதியில் கடுமையான வறட்சி நிலவி வருகிறது. இதனால், வன விலங்குகள் உணவு மற்றும் குடிநீா் தேடி விளைநிலங்கள், குடியிருப்புப் பகுதிகளுக்குள்அடிக்கடி புகுந்துவிடுகின்றன. இதனால், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.
இந்நிலையில், மேட்டுப்பாளையம்-கோத்தகிரி சாலையில் காட்டு யானை வியாழக்கிழமை நடமாடியது. அவ்வழியாக காய்கறிகளை ஏற்றிக்கொண்டு சென்ற வாகன ஓட்டுநா்கள் சாலையில் நடமாடிய யானையைப் பாா்த்து அச்சமடைந்து வாகனங்களை நிறுத்திவிட்டனா். சுமாா் அரை மணி நேரத்துக்குப் பிறகு யானை அடா்ந்த வனப் பகுதிக்குள் சென்றுவிட்டது. அதன் பிறகு வாகன ஓட்டுநா்கள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.