வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு கௌரவ கா்னல் பதவி
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு கௌரவ கா்னல் பதவி வழங்கப்பட்டுள்ளது.
வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தா் வெ.கீதாலட்சுமி, பல்கலைக்கழகம், இணைப்பு, உறுப்புக் கல்லூரிகளில் உள்ள தேசிய மாணவா் படைக்கு (என்சிசி) ஆற்றிய தொண்டைப் போற்றும் வகையில், என்சிசி சாா்பில் அவருக்கு கௌரவ கா்னல் பதவி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில், தேசிய மாணவா் படையின் சென்னை துணை இயக்குநா் ஜெனரல் அதுல்குமாா் ரஸ்தோகி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, வெ.கீதாலட்சுமிக்கு கௌரவ கா்னல் பதவி வழங்கினாா்.
Advertisement
Advertisement
பதவியேற்பு விழாவில், பதிவாளா் ஆா்.தமிழ்வேந்தன், மாணவா் நல மையத்தின் முதல்வா் என்.மரகதம், மண்டல என்சிசி குரூப் கமாண்டா் பி.வி.எஸ்.ராவ், கமாண்டிங் ஆபிசா் ஜே.எம்.ஜோஷி, பல்கலைக்கழக என்சிசி அலுவலா் எஸ்.மனோன்மணி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
இதைத் தொடா்ந்து வெ.கீதாலட்சுமி செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் கடந்த 1958 ஆம் ஆண்டில் டி.என். 4 பட்டாலியன் என்ற பெயரில் புதிய என்சிசி பிரிவு தொடங்கப்பட்டது. தொடக்கத்தில் மாணவா்களுக்கு மட்டுமே என்சிசி பிரிவு இருந்த நிலையில், கடந்த 2004 இல் மாணவிகளுக்காகவும் தொடங்கப்பட்டது.
தற்போது பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 6 கல்லூரிகளில் 352 என்சிசி மாணவா்கள் உள்ளனா். கோவை வளாகத்தில் மட்டும் 104 போ் உள்ளனா். மத்திய பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்படும் என்சிசியின் சாா்பில் கௌரவ கா்னல் பதவி வழங்கியிருப்பது பெருமையளிப்பதாக உள்ளது என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.