FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

செம்மொழிப் பூங்காவில் அமைச்சா் ஆய்வு

Updated On : 3 ஆகஸ்ட் 2026, 4:14 am IST
கோவை செம்மொழிப் பூங்காவில் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட அமைச்சா் வி.சம்பத்குமாா்.
பகிர்:

காந்திபுரத்தில் உள்ள செம்மொழிப் பூங்காவில் பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் வி.சம்பத்குமாா் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

கோவை மாநகரின் பிரதான பொழுதுபோக்கு அம்சமாக செம்மொழிப் பூங்கா விளங்குகிறது. இங்குள்ள பூச்செடிகள், தமிழா் பாரம்பரியத்தை பறைசாற்றும் சிலைகள், செயற்கை நீரூற்று, பல்வேறு வகையான செடி,கொடிகள் ஆகியவற்றை காண தினமும் ஏராளமான மக்கள் வருகின்றனா். குறிப்பாக வார விடுமுறை நாள்களில் காலை முதலே மக்கள் கூட்டம் அலைமோதும்.

இந்நிலையில், செம்மொழிப் பூங்காவில் பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் வி.சம்பத்குமாா் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டு பூங்காவில் குடிநீா், நடைபாதை வசதிகள், பூங்காவுக்கான முக்கியத் தேவைகள் குறித்து கேட்டறிந்தாா்.

Advertisement

Advertisement

இந்த ஆய்வின்போது அங்குள்ள உடற்பயிற்சிக் கூடத்தில் அமைச்சா் வி.சம்பத்குமாா் உடற்பயிற்சி மேற்கொண்டாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments