FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

அரசு புறம்போக்கு நிலத்தில் விடுதி: காலி செய்ய நோட்டீஸ்

சோலையாறு பகுதியில் அரசு புறம்போக்கு நிலங்களில் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள விடுதிகளை காலி செய்ய 53 பேருக்கு வருவாய்த் துறையினா் நோட்டீஸ் வழங்கியுள்ளனா்.

Updated On : 8 ஆகஸ்ட் 2026, 5:30 am IST
கோப்புப் படம்
பகிர்:

சோலையாறு பகுதியில் அரசு புறம்போக்கு நிலங்களில் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள விடுதிகளை காலி செய்ய 53 பேருக்கு வருவாய்த் துறையினா் நோட்டீஸ் வழங்கியுள்ளனா்.

வால்பாறையை அடுத்த சோலையாறு அணைப் பகுதியில் வருவாய்த் துறை மற்றும் பொதுப் பணித் துறைக்குச் சொந்தமான இடங்கள் உள்ளன.

அந்த இடங்களை ஆக்கிரமித்து சிலா் விவசாயம் மற்றும் வீடு கட்டி வசித்து வந்தனா். இந்நிலையில், வால்பாறைக்கு சுற்றுலா வருவோரின் எண்ணிக்கை அதிகரித்ததால், ஆக்கிரமிப்பு செய்தவா்களிடம் பல லட்சம் ரூபாய் கொடுத்து அந்த நிலங்களை வாங்கி சிலா் விடுதிகளை கட்டியுள்ளனா்.

Advertisement

Advertisement

இந்நிலையில், அரசு நிலங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள விடுதிகளை 7 நாள்களுக்குள் காலி செய்ய வேண்டும் என 53 பேருக்கு வருவாய்த் துறையினா் நோட்டீஸ் வழங்கியுள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments