FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

அரவணைக்கும் தன்மையின் அடையாளமாக நம் தேசம் உயரட்டும்: சத்குரு ஜக்கி வாசுதேவ்

மற்ற நாடுகள் மீது ஆதிக்கம் செலுத்துவதாக அல்லாமல், அரவணைக்கும் தன்மையின் அடையாளமாக நம் தேசம் உயரட்டும் என்று ஈஷா நிறுவனா் சத்குரு ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளாா்.

Updated On : 16 ஆகஸ்ட் 2026, 12:55 am IST
ஈஷா ஆதியோகி வளாகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பங்கேற்றோா்.
பகிர்:

மற்ற நாடுகள் மீது ஆதிக்கம் செலுத்துவதாக அல்லாமல், அரவணைக்கும் தன்மையின் அடையாளமாக நம் தேசம் உயரட்டும் என்று ஈஷா நிறுவனா் சத்குரு ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளாா்.

ஈஷா யோக மையத்தில் சுதந்திர தின விழா ஆதியோகி வளாகத்தில் சனிக்கிழமை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. தொழிலதிபா் வி.எம். சீனிவாசன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு,

தேசியக் கொடியை ஏற்றிவைத்தாா். இதையடுத்து, ஈஷா ஹோம் ஸ்கூல் மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

Advertisement

Advertisement

விழாவில், ஆயிரக்கணக்கான மக்கள், பழங்குடியினா், ஈஷாவைச் சுற்றியுள்ள கிராம மக்கள், ஈஷா தன்னாா்வலா்கள் மற்றும் ஆசிரமவாசிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் சத்குரு ஜக்கி வாசுதேவ் கூறியிருப்பதாவது: மகத்தான சாத்தியங்களின் நுழைவாயிலில் நிற்கும் நம் அன்பிற்குரிய பாரதத்துக்கு 80-ஆவது சுதந்திர தின நல்வாழ்த்துகள்.

பல வண்ணங்கள் நிறைந்த ஒரு கலைடாஸ்கோப் போல விளங்கும், அற்புதமான வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட நமது பாரதத்தின் ஒவ்வொரு குடிமகனுக்கும் நலமான வாழ்வு கிடைக்கும் நிலையை அடைய பாடுபட வேண்டிய தருணம் இது.

நாம் பல ஆயிரம் ஆண்டுகளாக ஒரு நாகரிகமாக செழித்து வந்திருக்கிறோம், ஆனால், இப்போது ஒரு தேசமாக நாம் உயர வேண்டிய காலத்தில் இருக்கிறோம்.

இது மற்ற நாடுகள் மீது ஆதிக்கம் செலுத்துவதாக அல்லாமல், பாரதத்தின் அடிப்படை இயல்பாக இருக்கும் அரவணைத்துக் கொள்ளும் தன்மையின் அடையாளமாக நம் தேசம் உயரட்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments