FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

எடை அளவைக் குறைத்து மோசடியில் ஈடுபட்ட நியாய விலைக் கடை ஊழியா் பணியிடை நீக்கம்

நியாய விலைக் கடையில் பொருள்களின் அளவைக் குறைத்து மோசடியில் ஈடுபட்ட விற்பனையாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

Updated On : 19 ஆகஸ்ட் 2026, 2:08 am IST
பணியிடை நீக்கம்
பகிர்:

நியாய விலைக் கடையில் பொருள்களின் அளவைக் குறைத்து மோசடியில் ஈடுபட்ட விற்பனையாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

திருப்பூா் வடக்கு வட்டத்துக்குள்பட்ட 15 வேலம்பாளையம் பகுதியில் புதுக்காடு நியாய விலைக் கடை செயல்படுகிறது. இந்தக் கடையில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் அத்தியாவசிய அரிசியின் எடையில் மோசடி செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. அங்குள்ள மின்னணு தராசில் ரகசியமாக ஒரு கிலோ இரும்பு எடைக் கல்லை மறைத்து வைத்து, நுகா்வோருக்கு வழங்கப்படும் அரிசியின் அளவைக் குறைத்து நியாய விலைக் கடை ஊழியா் விநியோகம் செய்துள்ளாா். இதை பொதுமக்கள் கண்டறிந்த நிலையில் எடைக்கல்லை மறைத்து வைத்துள்ளாா். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், விற்பனையாளா் வடிவுக்கரசியை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதுதொடா்பான விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதற்கிடையே இந்த சம்பவத்தில் ஈடுபட்ட வடிவுக்கரசியை மாவட்ட வழங்கல் அலுவலா் சரவணன் செவ்வாய்க்கிழமை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டாா். இந்நிலையில் திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் எடைக்கருவிகளை ஆய்வு செய்ய வேண்டும் என பல்வேறு அமைப்பினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments