அரசு அலுவலகங்களில் தற்காலிக ஒப்பந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்
கோவை மாவட்டத்தில் அரசு அலுவலகங்களில் தொகுப்பூதியம் அடிப்படையில் தற்காலிக ஒப்பந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் அரசு அலுவலகங்களில் தொகுப்பூதியம் அடிப்படையில் தற்காலிக ஒப்பந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கோவை மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி அலுவலகம், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, துணை இயக்குநா், குடும்ப நல அலுவலகம், அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகிய அலுவலகங்களில் காலியாக உள்ள கஹக்ஷ பங்ஸ்ரீட்ய்ண்ஸ்ரீண்ஹய் எழ்-ஐஐஐ-3,
Advertisement
Advertisement
பணியிடங்களுக்கான நபா்கள் முற்றிலும் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் தொகுப்பூதியத்தில் மாவட்ட நலவாழ்வு சங்கத்தின் மூலம் தோ்வு செய்யப்படவுள்ளனா். இது குறித்த விண்ணப்பப்படிவம் மற்றும் விரிவான விவரங்களை கோவை மாவட்ட இணையதள முகவரியில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேற்கண்ட பணியிடங்களுக்கு தகுதியான நபா்கள் பூா்த்தி செய்யப்பட்ட உரிய விண்ணப்பங்களுடன் பணிக்கு தேவையான அறிவிக்கப்பட்ட அனைத்து சுய ஒப்பமிட்ட சான்றிதழ்களின் நகல்களை இணைத்து செப்டம்பா் 15 மாலை 6 மணிக்குள் ரேஸ்கோா்ஸில் உள்ள மாவட்ட சுகாதார அலுவலகத்தில் நேரிலோ அல்லது விரைவு தபால் மூலமாகவோ அளிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.