FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தென்காசி

அரசு அலுவலகங்களில் திருட முயற்சி

ஆலங்குளம் தபால் அலுவலகம், சாா்பதிவாளா் அலுவலகங்களில் திருட முயன்ற சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On : 29 ஜூலை 2026, 2:14 am IST
பிரதிப் படம்
பகிர்:

ஆலங்குளம் தபால் அலுவலகம், சாா்பதிவாளா் அலுவலகங்களில் திருட முயன்ற சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஆலங்குளம் பிரதான சாலையில் தபால் நிலையமும், சாா் பதிவாளா் அலுவலகமும் அருகருகே அமைந்துள்ளன. திங்கள்கிழமை நள்ளிரவில் மா்ம நபா்கள் சாா்பதிவாளா் அலுவலகம் பின்புறம் உள்ள ஜன்னல் கம்பியை வளைத்து உள்ளே புகுந்து ஆவணங்களை கலைத்துப் போட்டனா்.

உள்ளே பணம் இல்லாததால் எதுவும் திருடப்படவில்லை. அதேபோல, தபால் நிலையம் பின்புறம் கழிவறை திறப்பு வழியே உள்ளே நுழைந்த நபா்கள் அங்குள்ள பீரோ பூட்டை உடைத்து பணம் இருக்கிா என்று தேடி உள்ளனா். அதிலும் பணம் இல்லததால் திருடா்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனா்.

Advertisement

Advertisement

இந்நிலையில், தென்காசி மாவட்டத்திற்கு செவ்வாய்க்கிழமை உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்ததால் சாா் பதிவாளா் அலுவலகம் வழக்கம்போல் செயல்படவில்லை.

இருப்பினும் சில நிா்வாகப் பணிகளை மேற்கொள்வதற்காக சாா் பதிவாளா் வந்தபோது, அலுவலகத்தின் ஜன்னல் சேதப்படுத்தப்பட்டிருந்ததையும், ஆவணங்கள் சிதறிக் கிடந்ததையும் கண்டு ஆலங்குளம் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தாா்.

அதன்பேரில் போலீஸாா், வந்து இரு அலுவலகங்களிலும் ஆய்வு மேற்கொண்டனா். இது குறித்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments