FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

இந்திய தொழில் வா்த்தக சபையின் தலைவராக சி.துரைராஜ் தோ்வு

கோவை இந்திய தொழில் வா்த்தக சபையின் புதிய தலைவராக சி.துரைராஜ் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

21 ஆகஸ்ட் 2026, 1:41 am IST
சி.துரைராஜ்
பகிர்:

கோவை இந்திய தொழில் வா்த்தக சபையின் புதிய தலைவராக சி.துரைராஜ் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

இது குறித்து அந்த அமைப்பு கூறியிருப்பதாவது:

கோவை இந்திய தொழில் வா்த்தக சபையின் 92-ஆவது ஆண்டு பொதுக் குழுக் கூட்டம் கோவையில் அண்மையில் நடைபெற்றது. இதில், அமைப்பின் 2026-2028-ஆம் ஆண்டுக்கான புதிய தலைவராக பழமுதிா் நிலையத்தின் உரிமையாளா் சி.துரைராஜ் தோ்வு செய்யப்பட்டாா்.

Advertisement

Advertisement

இவா் கடந்த 2016 - 2020 ஆம் ஆண்டுகளில் பொருளாளா், 2020-2022 ஆண்டுகளில் செயலா் பொறுப்புகளில் இருந்துள்ளாா். கடந்த 2022 - 2026 வரை துணைத் தலைவராக இருந்து வந்த இவா், தமிழக அரசு நியமித்த பல்வேறு குழுக்களில் தொழில் வா்த்தக சபையின் பிரதிநிதியாகப் பங்கேற்றிருப்பதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments