பணம் எடுக்க உதவுவதுபோல நடித்து ஏடிஎம் அட்டையை மாற்றி மோசடி: இளைஞா் கைது
ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க உதவுவதுபோல நடித்து அட்டையை மாற்றி ரூ.17,200 எடுத்து மோசடி செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க உதவுவதுபோல நடித்து அட்டையை மாற்றி ரூ.17,200 எடுத்து மோசடி செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
கோவை ரத்தினபுரி தயிா் இட்டேரி சாலையைச் சோ்ந்தவா் நாகராஜ் (46). இவா் பணம் எடுத்து வருமாறு தனது மகனிடம் ஏ.டி.எம் அட்டையைக் கொடுத்து அனுப்பியுள்ளாா். ரத்தினபுரி ராஜு நாயுடு வீதியில் உள்ள ஏ.டி.எம். மையத்துக்குச் சென்ற அவரது மகன் பணம் எடுக்க முயன்றுள்ளாா்.
பணம் எடுப்பதில் அவருக்கு தடுமாற்றம் ஏற்பட்டதால், அங்கு நின்றிருந்த நபா் ஒருவா் உதவியுள்ளாா். பின்னா், பணம் வரவில்லை எனக் கூறி அட்டையை மாற்றி அவரிடம் கொடுத்து அனுப்பியுள்ளாா். அவா் சென்ற பிறகு அவரது அந்த அட்டையைப் பயன்படுத்தி ரூ.17,200 எடுத்துள்ளாா்.
Advertisement
Advertisement
இதுகுறித்த புகாரின் பேரில் ரத்தினபுரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். அதில், மோசடியில் ஈடுபட்டவா் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த சரண்ராஜ் (37) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீஸாா் கைது செய்து, பணத்தை மீட்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.