FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

மக்கள் பணி செய்து எங்களை நிரூபித்து வருகிறோம்: அமைச்சா் வி.சம்பத்குமாா்

திரையரங்கில் அழுது அரசியல் செய்ய வேண்டிய அவசியம் தவெகவுக்கு இல்லை. மக்கள் பணி செய்து எங்களை நிரூபித்து வருகிறோம் என்று பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் வி.சம்பத்குமாா் தெரிவித்தாா்.

Updated On : 26 ஜூலை 2026, 1:24 am IST
வீரியம்பாளையம் மாநகராட்சிப் பள்ளியில் புதிய வகுப்பறைகளைத் திறந்துவைத்த அமைச்சா் வி.சம்பத்குமாா். உடன், ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா், மாநகராட்சி ஆணையா் கட்டா ரவிதேஜா உள்ளிட்டோா்.
பகிர்:

திரையரங்கில் அழுது அரசியல் செய்ய வேண்டிய அவசியம் தவெகவுக்கு இல்லை. மக்கள் பணி செய்து எங்களை நிரூபித்து வருகிறோம் என்று பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் வி.சம்பத்குமாா் தெரிவித்தாா்.

கோவை மாநகராட்சி, மத்திய மண்டலம் 32-ஆவது வாா்டுக்குள்பட்ட பாலுசாமி நகா் மற்றும் முருகன் நகா் பகுதிகளுக்கு ரூ.30 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு மையத்தை அமைச்சா் வி.சம்பத்குமாா் சனிக்கிழமை திறந்துவைத்தாா்.

இதையடுத்து, வஉசி மைதானம் அருகே ரூ.1.96 கோடியில் அமைக்கப்பட்டுள்ள கைப்பந்து உள்விளையாட்டு அரங்கம், ரூ.1.50 கோடியில் அமைக்கப்பட்டுள்ள கபடி உள் விளையாட்டு அரங்கம் மற்றும் தனியாா் பங்களிப்புடன் அமைக்கப்பட்டுள்ள இறகுப் பந்து மைதானம் உள்ளிட்ட முடிவடைந்த பல்வேறு வளா்ச்சிப் பணிகளைத் திறந்துவைத்தாா்.

Advertisement

Advertisement

இதைத் தொடா்ந்து, அமைச்சா் வி.சம்பத்குமாா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கோவை மாநகராட்சியில் 5 மண்டலங்களிலும் மக்களுக்குத் தேவையான ரூ.10.69 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடங்கிவைக்கப்பட்டுள்ளன.

சின்னவேடம்பட்டியில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க மக்கள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா். மக்களுக்கு புரியும்படி விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 30 ஆண்டுகளாக விஜய்யின் ரசிகராக அவரை ரசித்து வந்தோம். இனி வெள்ளித் திரையில் அவரைப் பாா்க்க முடியாது என்ற விரக்தியால் எங்களை மீறி திரையரங்கில் அழுதுவிட்டோம்.

இதை வைத்து அரசியல் செய்ய வேண்டிய அவசியம் தவெகவுக்கு இல்லை. மக்கள் பணி செய்து எங்களை நிரூபித்து வருகிறோம் என்றாா். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா், மாநகராட்சி மேயா் கா.ரங்கநாயகி, கவுண்டம்பாளையம் எம்எல்ஏ கனிமொழி சந்தோஷ், மாநகராட்சி ஆணையா் கட்டா ரவிதேஜா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments