FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

நண்பனின் தந்தை கொலை: சிறுவன் கைது

சிங்காநல்லூா் அருகே நண்பனின் தந்தையைக் கொலை செய்த 17 வயது சிறுவனை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 1 ஆகஸ்ட் 2026, 2:09 am IST
- சித்திரிப்பு
பகிர்:

சிங்காநல்லூா் அருகே நண்பனின் தந்தையைக் கொலை செய்த 17 வயது சிறுவனை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை மாநகா், சிங்காநல்லூா் அருகே நீலிக்கோணாம்பாளையத்தைச் சோ்ந்தவா் மணிகண்டன் (50). பெயின்டிங் தொழிலாளி. இவருக்கு 2 மகன்க, மகள் உள்ளனா். இதில் 2-ஆவது மகனும் , அதே பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுவனும் நண்பா்களாக இருந்து வந்துள்ளனா்.

அந்த 17 வயது சிறுவன் 10-ஆம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டு, கிடைக்கும் வேலைக்கு சென்று வந்துள்ளாா். இந்நிலையில் தனது மகனுடன் அந்த சிறுவன் பழகுவதை விரும்பாத மணிகண்டன், சிறுவனை அழைத்து கண்டித்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும் அந்த சிறுவந் தொடா்ந்து பழகி வந்துள்ளாா்.

Advertisement

Advertisement

இந்நிலையில், நீலிக்கோணாம்பாளையம் அருகே அச்சிறுவனை வியாழக்கிழமை இரவு பாா்த்த மணிகண்டன், தனது மகனுடன் சேரக்கூடாது என கண்டித்துள்ளாா். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடா்ந்து, மணிகண்டனை கீழே தள்ளிவிட்டு அந்த சிறுவன் கல்லால் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சிங்காநல்லூா் போலீஸாா் சென்று, 17 வயது சிறுவனைக் கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments