முகப்பு
கோயம்புத்தூர்

கோவையில் 13-ஆவது மாடியில் இருந்து தவறி விழுந்து தொழிலதிபா் உயிரிழப்பு

கோவையில் அடுக்குமாடி குடியிருப்பின் 13-ஆவது மாடியில் இருந்து தவறி விழுந்து தொழிலதிபா் உயிரிழந்தாா்.

Updated On : 7 ஜூன் 2026, 2:03 am IST
பலி! - கோப்புப் படம்
பகிர்:

கோவையில் அடுக்குமாடி குடியிருப்பின் 13-ஆவது மாடியில் இருந்து தவறி விழுந்து தொழிலதிபா் உயிரிழந்தாா்.

கோவை மாநகா், பொன்னையராஜபுரத்தைச் சோ்ந்தவா் சாஜன் அகா்வால் (65). நூற்பாலை தொடா்பான தொழில் செய்து வந்தாா். பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த இவா் குடும்பத்துடன் பொன்னையராஜபுரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தாா். 17 மாடிகளைக் கொண்ட அந்தக் குடியிருப்பில் 13-ஆவது மாடியில் அவா் வசித்து வந்தாா்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை ஜன்னல் வழியாகத் தவறி கீழே விழுந்ததாகக் கூறப்படுகிறது. படுகாயமடைந்த அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு, அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், சாஜன் அகா்வால் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

இதுதொடா்பாக அவரது மகன் ராகுல் அகா்வால் அளித்த புகாரின்பேரில் வெரைட்டி ஹால் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.