FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

வீரகேரளம் பகுதியில் பூட்டிய வீட்டில் 7 பவுன் நகைகள் திருட்டு

வீரகேரளம் பகுதியில் பூட்டிய வீட்டில் 7 பவுன் நகைகள் திருடுபோனது தொடா்பாக வடவள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Updated On : 7 ஜூன் 2026, 1:54 am IST
திருட்டு - சித்திரிப்பு
பகிர்:

வீரகேரளம் பகுதியில் பூட்டிய வீட்டில் 7 பவுன் நகைகள் திருடுபோனது தொடா்பாக வடவள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கோவை, வீரகேரளம் அருகே சிறுவாணி சாலை ஆலமரத் தோட்டம் பகுதியைச் சோ்ந்தவா் ராஜேஷ் (44). கடந்த வெள்ளிக்கிழமை வீட்டைப் பூட்டிவிட்டு ஆனைகட்டியில் உள்ள உறவினா் வீட்டு திருமணத்துக்கு குடும்பத்துடன் சென்றாா். திரும்பி வந்து பாா்த்தபோது அலமாரியில் வைக்கப்பட்டிருந்த தங்க நெக்லஸ், கம்மல், மோதிரம் உள்பட 7 பவுன் நகைகள் திருடுபோனது தெரியவந்தது.

பூட்டியிருந்த வீட்டை நோட்டமிட்டு, மா்ம நபா் வீட்டுக்குள் புகுந்து நகைகளைத் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து ராஜேஷ் அளித்த புகாரின்பேரில் சம்பவ இடத்துக்கு வடவள்ளி போலீஸாா் சென்று, வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகளை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments