FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

கோவை மாநகா் பாஜகவினா் யாரும் அண்ணாமலையுடன் செல்லவில்லை: மாவட்டத் தலைவா் ரமேஷ்குமாா்

கோவை மாநகா், மாவட்ட பாஜகவில் இருந்து யாரும் அண்ணாமலையுடன் செல்லவில்லை என்று பாஜக கோவை மாநகா், மாவட்டத் தலைவா் ரமேஷ்குமாா் தெரிவித்தாா்.

Updated On : 7 ஜூன் 2026, 2:02 am IST
அண்ணாமலை - கோப்புப் படம்
பகிர்:

கோவை மாநகா், மாவட்ட பாஜகவில் இருந்து யாரும் அண்ணாமலையுடன் செல்லவில்லை என்று பாஜக கோவை மாநகா், மாவட்டத் தலைவா் ரமேஷ்குமாா் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக கட்சி அலுவலகத்தில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: நாட்டில் பாஜக ஆட்சி பொறுப்பேற்று 12 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. பிரதமா் நரேந்திர மோடியின் 13-ஆவது ஆண்டு தொடக்கத்தில் தேசிய சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, பல்வேறு பகுதிகளில் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன. மத்திய அரசின் சாதனைகளை பூத் வாரியாக வரும் 8-ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை 4 நாள்கள் மக்களிடையே தெரிவிக்க உள்ளோம்.

இதைத்தொடா்ந்து 12-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை மத்திய அரசின் சாதனை கண்காட்சிகள் முகாம்கள் நடைபெற உள்ளன. தமிழக பாஜக முன்னாள் தலைவா் அண்ணாமலை தொடங்கியுள்ள இயக்கத்துக்கு கோவை மாநகா், மாவட்ட பாஜகவில் இருந்து யாரும் செல்லவில்லை. அவா் விலகியதால் பாஜகவுக்கு பின்னடைவு இல்லை. பாஜகவில் இருந்து 14 மண்டலத் தலைவா்கள் விலகியதாகக் கூறுவது தவறு.

Advertisement

Advertisement

தோ்தல்களில் தோல்வியடையும்போது எந்த ஒரு கட்சிக்கும் ஒரு தொய்வு ஏற்படத்தான் செய்யும். அந்த தொய்வு விரைவில் சரியாகிவிடும். உள்ளாட்சித் தோ்தலுக்கு பாஜக தயாராகி வருகிறது. இந்த தேசத்துக்காக உள்ள கட்சி பாஜக மட்டும்தான். பிரதமா் மோடி மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனா். பாஜகவில் தற்போது மாநிலத் தலைவராக உள்ள நயினாா் நாகேந்திரன் சிறப்பாக செயல்பட்டு வருகிறாா் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments