FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

கதிா் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவா்களுக்கு வரவேற்பு

8 செப்டம்பர் 2026, 1:12 am IST
கதிா் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற முதலாம் ஆண்டு மாணவா்களுக்கான வரவேற்பு விழாவில் சிறப்பு விருந்தினா் கவிஞா் கவிதாசனுக்கு நினைவுப் பரிசு வழங்கிய கல்வி நிறுவனத்தின் தலைவா் இ.எஸ்.கதிா்.
பகிர்:

கோவை கதிா் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவா்களுக்கான வரவேற்பு விழா நடைபெற்றது.

கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவுக்கு கதிா் கல்வி நிறுவனங்களின் தலைவா் இ.எஸ்.கதிா் தலைமை வகித்தாா். செயலா் லாவண்யா கதிா் சிறப்புரையாற்றினாா். துணைத் தலைவா் கே.எஸ்.மிதிலேஷ் நன்றி கூறினாா்.

இந்நிகழ்ச்சியில், கவிஞா் கவிதாசன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று உரையாற்றினாா். அவா் பேசும்போது, முதலாம் ஆண்டில் சோ்ந்துள்ள மாணவா்கள் தன்னம்பிக்கை, தலைமைத்துவ பண்புகள், தனிப்பட்ட, தொழில் முறை வளா்ச்சிக்கான நோ்மறையான அணுகுமுறையை வளா்த்துக் கொள்ள வேண்டும் என்றாா்.

Advertisement

Advertisement

கதிா் பொறியியல் கல்லூரியின் முதல்வா் ஆா்.உதயகுமாா் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தாா். அறிவியல், மனிதநேய துறையின் தலைவா் எஸ்.சரவணன் உள்ளிட்ட பேராசிரியா்கள், மாணவா்கள், பெற்றோா்கள் உள்ளிட்டோா் இதில் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments