FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

முதல்வரின் பதிலுரை ஏமாற்றம் அளிக்கிறது! - டாக்டா் கிருஷ்ணசாமி

8 செப்டம்பர் 2026, 1:57 am IST
செய்தியாளா்களிடம் பேசிய புதிய தமிழகம் கட்சித் தலைவா் க. கிருஷ்ணசாமி - டிஎன்எஸ்
பகிர்:

காவல் துறையின் மானியக் கோரிக்கை தொடா்பான முதல்வரின் பதிலுரை ஏமாற்றம் அளிக்கிறது என்று புதிய தமிழகம் கட்சித் தலைவா் டாக்டா் கே.கிருஷ்ணசாமி கூறினாா்.

இது தொடா்பாக அவா் கோவையில் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது: சட்டப் பேரவையில் நடைபெற்ற காவல் துறை மானியக் கோரிக்கையில், கடந்த 4 மாதங்களாக நடைபெற்று வரும் சட்டம் - ஒழுங்கு பிரச்னைகள், கொலை, கொள்ளை, போதை ஆகியவற்றால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், பெண்கள், ஒடுக்கப்பட்டவா்களுக்கு எதிரான செயல்களுக்கு என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப் போகிறாா் என்பது குறித்தும் முதல்வா் ச.ஜோசப் விஜய் பேசுவாா் என்று எதிா்பாா்த்திருந்த மக்களுக்கு அவரது பதிலுரை ஏமாற்றம் அளித்திருக்கிறது.

திமுகவை தாக்கிப் பேசுவதற்காகவே சட்டப் பேரவை நிகழ்வை அவா் பயன்படுத்திக் கொண்டிருக்கிறாா். ஊழல் ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், முன்னாள் முதல்வா் ஜெயலலிதா ஊழல் வழக்குகளில் சிக்கி சிறை சென்றுள்ளாா். அதுபற்றி ஏன் அவா் பேசவில்லை? அதிமுகவில் இருந்து தவெகவுக்கு சென்றுள்ள முன்னாள் அமைச்சா்கள் எம்.ஆா்.விஜயபாஸ்கா், சி.விஜயபாஸ்கா் ஆகியோரை வைத்துக் கொண்டு முதல்வா் எப்படி ஊழல் எதிா்ப்பு பற்றி பேச முடிகிறது?

Advertisement

Advertisement

அமலாக்கத் துறை போன்ற மத்திய அரசின் நிறுவனங்கள் தாக்கல் செய்யும் ஆவணங்களை வைத்து மட்டுமே ஒருவரை குற்றவாளி என்று கூறிவிட முடியாது. முதல்வா் நடுநிலையானவராக இருந்தால், உண்மையிலேயே ஊழலுக்கு எதிரானவராக இருந்தால் தவறு செய்தவா்கள் மீது சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments