FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

தனியார் பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கம்

கோபி ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹைடெக் பொறியியல் கல்லூரியில் மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறையின் சார்பாக ஒருநாள் கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

24 ஜனவரி 2024, 10:11 pm IST
பகிர்:

கோபி ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹைடெக் பொறியியல் கல்லூரியில் மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறையின் சார்பாக ஒருநாள் கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, பவானி நகர்மன்றத் தலைவரும், கல்லூரி செயலருமான கே.சி.கருப்பணன் தலைமை வகித்தார். கோவையைச் சேர்ந்த தொழிலதிபர் ஜி.ரவிச்சந்திரன் கருத்தரங்கை துவக்கி வைத்து பேசினார்.

இக்கருத்தரங்கில், அறிக்கை சமர்ப்பித்தல், தொழில்நுட்ப விநாடி- வினா, மல்டி மீடியா மற்றும் அறிவியல் சார்ந்த போட்டிகள் நடைபெற்றன. இதில், தமிழ்நாட்டிலுள்ள 30 கல்லூரிகளிலிருந்து 250-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

விழாவில், கல்லூரித் தலைவர் ப.வெங்கடாசலம், முதல்வர் ப.தங்கவேல், கல்லூரியின் அறங்காவலர் கே.ஆர்.கவியரசு, துறைத் தலைவர் ஆர்.முத்துக்குமார், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments