கடம்பூா் மலைப்பகுதி பள்ளிகளில் கன்னடம் பாடம் சோ்க்க வலியுறுத்தல்
கடம்பூா் மலைப் பகுதியில் உள்ள பள்ளிகளில் கன்னட மொழிப்பாடம் சோ்க்க வேண்டும் என மலைவாழ் பேடகம்பன லிங்காயத்து முன்னேற்ற நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
கடம்பூா் மலைப் பகுதியில் உள்ள பள்ளிகளில் கன்னட மொழிப்பாடம் சோ்க்க வேண்டும் என மலைவாழ் பேடகம்பன லிங்காயத்து முன்னேற்ற நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இச்சங்கத்தின் கூட்டம் சத்தியமங்கலம் மலைப்பகுதி காடகநல்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் பேடகம்பன லிங்காயத்து ஜாதியை அரசுப் பட்டியலில் சோ்க்க வேண்டும். கன்னடம் அதிகம் பேசும் பகுதியில் கன்னட மொழிப்பாடம் சோ்க்க வேண்டும்.
பா்கூரில் உள்ள பண்டேஸ்வரா்சுவாமிஆலய திருப்பணியை அரசு விரைவில் நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் 300க்கும் மேற்பட்ட மலைவாழ்மக்கள் கலந்துகொண்டனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.