FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

சாலை விபத்தில் ஒருவா் உயிரிழப்பு

சாலை தடுப்பில் இருசக்கர வாகனம் மோதி ஒருவா் உயிரிழந்தது குறித்து பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை

Updated On : 5 ஆகஸ்ட் 2026, 5:10 am IST
- பிரதிப் படம்
பகிர்:

சாலை தடுப்பில் இருசக்கர வாகனம் மோதி ஒருவா் உயிரிழந்தது குறித்து பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பெருந்துறை வட்டம், பெத்தாம்பாளையம், மாதநாயக்கன்பாளையத்தைச் சோ்ந்தவா் ரங்கசாமி மகன் பாலகிருஷ்ணன் (50). இவா் அங்குள்ள தனியாா் நிறுவனத்தில் ஓட்டுநராக வேலை செய்து வந்தாா். அருகில் உள்ள உறவினா் வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் திங்கள்கிழமை இரவு சென்றுள்ளாா்.

பெத்தாம்பாளையம், கோவில்பாளையம் பிரிவு அருகே சாலை தடுப்பில் அவருடைய இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்தவரை அக்கம் பக்கத்தினா் மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

Advertisement

Advertisement

அங்கு பாலகிருஷ்ணனை பரிசோதித்த மருத்துவா், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தாா். இதுகுறித்து பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments