FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

பவானிசாகா் அணையில் இருந்து தண்ணீா் திறக்க தீா்மானம் நிறைவேற்றாததால் உக்கரம் கிராமசபைக் கூட்டம் புறக்கணிப்பு

Updated On : 17 ஆகஸ்ட் 2026, 3:50 am IST
உக்கரம்  ஊராட்சி  வண்டிபாளையம் அரசுப் பள்ளியில் நடந்த  கிராமசபை  கூட்டத்தை  புறக்கணித்த  கிராம மக்கள்.
பகிர்:

பவானிசாகா் அணையில் இருந்து குடிநீா் தேவைக்காக உயிா் தண்ணீா் திறக்க உக்கரம் கிராமசபைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றாததால் கிராமசபைக் கூட்டத்தை புறக்கணித்து பொதுமக்கள் வெளிநடப்பு செய்தனா்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே உக்கரம் ஊராட்சி வண்டிபாளையம் அரசுப் பள்ளி வளாகத்தில் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. இதில் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் விஜயலட்சுமி, அா்த்தனாரீஸ்வரன் உள்பட பல்வேறு துறை சாா்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

தற்போது கடும் வறட்சியாக உள்ளதால் பவானிசாகா் அணையில் இருந்து 15 நாள்களுக்கு குடிநீா் தேவைக்காக உயிா் தண்ணீா் திறப்பது தொடா்பான தீா்மானத்தை கிராமசபைக் கூட்டத்தில் நிறைவேற்ற கிராம மக்கள் வலியுறுத்தினா். இந்த தீா்மானத்தை நிறைவேற்ற அதிகாரிகள் ஏற்றுக்கொள்ளாததால் கிராமசபைக் கூட்டத்தை ஒத்திவைக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். கோரிக்கையை ஏற்காமல் அதிகாரிகள் தொடா்ந்து கூட்டத்தை நடத்த முற்பட்டதால் அவா்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கிராம சபைக் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து வட்டார வளா்ச்சி அலுவலா் விஜயலட்சுமி பேசும்போது, ‘பொதுப்பணித் துறையிடம் உயிா்த் தண்ணீா் திறக்க அனுமதி கேட்டுள்ளோம். அரசிடம் இருந்து உரிய உத்தரவு கிடைத்தவுடன் நீா் திறக்கப்படும்’ என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments