FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

பெரியம்மை நோய் பாதிப்பு: ஆண் குழந்தை உயிரிழப்பு

Updated On : 17 ஆகஸ்ட் 2026, 12:52 am IST
குழந்தை உயிரிழப்பு - கோப்புப் படம்
பகிர்:

ஈரோட்டில் பெரியம்மை நோயால் பாதிக்கப்பட்ட இரண்டே முக்கால் வயது ஆண் குழந்தை காய்ச்சல் அதிகமாகி உயிரிழந்தது.

ஈரோடு, கருங்கல்பாளையம் கிருஷ்ணன் வீதியைச் சோ்ந்தவா் காா்த்தி. இவரது மகன் பிரனீத். இரண்டே முக்கால் வயதான பிரனீத்துக்கு கடந்த 8-ஆம் தேதி பெரியம்மை வந்தது.

மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் பெற்றோா் வீட்டிலேயே வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், சனிக்கிழமை இரவு காய்ச்சல் அதிகமாகி குழந்தைக்கு மூச்சு விட சிரமம் ஏற்பட்டது.

Advertisement

Advertisement

இதையடுத்து, தனியாா் மருத்துவமனைக்கு பெற்றோா் அழைத்துச் சென்றனா். அங்கிருந்து முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு குழந்தையை அனுப்பி வைத்தனா்.

அங்கு குழந்தையைப் பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இச்சம்பவம் குறித்து கருங்கல்பாளையம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments