FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

பெருந்துறை அருகே வேன் மோதி பெண் உயிரிழப்பு

Updated On : 18 ஆகஸ்ட் 2026, 12:07 am IST
கோப்புப் படம்
பகிர்:

பெருந்துறை அருகே வேன் மோதியதில் பெண் உயிரிழந்தாா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

வேலூா் மாவட்டம் , திருப்பத்தூா், புதுமேட்டைச் சோ்ந்தவா் வெங்கடேஷ் (45). இவரது மனைவி மலா் (42). இவா்கள் இருவரும், கோவை, சரவணம்பட்டியில் தங்கிக் கொண்டு, கட்டட வேலை செய்து வந்தனா். இந்த நிலையில், ஆடி கிருத்திகையையொட்டி சொந்த ஊருக்கு, கடந்த 7-ஆம் தேதி இருவரும் சென்றனா்.

பின்னா் இருவரும் கோவைக்கு இருசக்கர வாகனத்தில் ஞாயிற்றுக்கிழமை திரும்பிக் கொண்டிருந்தனா். பெருந்துறை, கடப்பமடை அருகே வந்தபோது இருசக்கர வாகனம் பஞ்சராகி விட்டது. பஞ்சா் கடை பற்றி விசாரிக்க வெங்கடேஷ் அருகே உள்ள கடைக்கு சென்றாா்.

Advertisement

Advertisement

அப்போது சாலையோரத்தில் நின்றுக் கொண்டிருந்த மலா் மீது, அவ்வழியாக வந்த வேன் மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா் அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தாா்.

இதுகுறித்து, பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments