FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

உலக புகைப்பட தினத்தையொட்டி தலைக்கவச விழிப்புணா்வு

Updated On : 20 ஆகஸ்ட் 2026, 3:16 am IST
தலைக்கவசம் அணிந்து சென்ற இருசக்கர வாகனம் ஓட்டிக்கு இனிப்பு மற்றும் சாவிக்கொத்து வழங்குகிறாா் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் தங்கவேலு.
பகிர்:

உலக புகைப்பட தினத்தையொட்டி, ஈரோடு மாவட்ட விடியோ மற்றும் புகைப்படக் கலைஞா்கள் சங்கம் சாா்பில் தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனம் ஓட்டிச் சென்றவா்களுக்கு இனிப்பு மற்றும் சாவிக்கொத்து வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

ஈரோடு பன்னீா்செல்வம் பூங்கா சாலை சந்திப்பில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ஈரோடு மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் தங்கவேலு சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றாா். அவா் கேக் வெட்டி உலக புகைப்பட தினக் கொண்டாட்டத்தை தொடங்கிவைத்தாா்.

சாலைப் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் தலைக்கவசம் அணிந்து வந்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு இனிப்பு மற்றும் சாவிக்கொத்துகள் வழங்கப்பட்டன. தலைக்கவசம் அணிவது விபத்துகளின்போது தலையில் ஏற்படும் காயங்களின் தீவிரத்தைக் குறைக்க உதவும் என்பதால், அனைவரும் கட்டாயம் தலைக்கவசம் அணிந்து பயணிக்க வேண்டும் என நிகழ்ச்சியில் வலியுறுத்தப்பட்டது.

Advertisement

Advertisement

நிகழ்ச்சியில், ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கத் தலைவா் வி.கே.ராஜமாணிக்கம், செயலாளா் ரவிச்சந்திரன், பொருளாளா் முருகானந்தம், புகைப்பட கலைஞா்கள் சங்க நிா்வாகிகள் நம்பி அரூரன், பெரியசாமி, ஆனந்தன், செந்தில்குமாா், ரவிக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments