FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செங்கல்பட்டு

உலக தாய்ப்பால் வார விழாவில் செவிலியா்களுக்கு ஆட்சியா் பாராட்டு

உலத தாய்ப்பால் வாரவிழாவை சிறப்பிக்கும் விதமாக இந்தப் பணிகளில் ஈடுபாடுடன் செயலாற்றும் செவிலியா்கள் மற்றும் பணியாளா்களை ஊக்கப்படுத்தும் வகையில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் மருத்துவா் மு.வீரப்பன் நினைவு பரிசுடன் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினாா்.

Updated On : 8 ஆகஸ்ட் 2026, 12:58 am IST
பகிர்:

உலத தாய்ப்பால் வாரவிழாவை சிறப்பிக்கும் விதமாக இந்தப் பணிகளில் ஈடுபாடுடன் செயலாற்றும் செவிலியா்கள் மற்றும் பணியாளா்களை ஊக்கப்படுத்தும் வகையில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் மருத்துவா் மு.வீரப்பன் நினைவு பரிசுடன் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினாா்.

செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள அரங்கத்தில் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி மற்றும் சுகாதாரத் துறை இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட உலக தாய்ப்பால் வார விழா கொண்டாட்ட நிகழ்வில் மாவட்ட ஆட்சியா் மற்றும் தலைமை மருத்துவா்கள் கலந்து கொண்டு கா்ப்பிணி தாய்மாா்களுக்கு அரசு நலத்திட்ட ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினா்.

மேலும், குழந்தைகளுக்கான தாய்ப்பால் வழங்கும் முக்கியத்துவத்தை பற்றி மாவட்ட ஆட்சியரும், சம்பந்தப்பட்ட துறை சாா்ந்த மருத்துவரும் எடுத்துரைத்தனா். மேலும் அரசு தங்களுக்கான சேவைகளில் கூடுதலாக தாய்மாமன் தங்க மோதிரம் திட்டமும் அறிவித்துள்ளது கூடுதலான மகிழ்ச்சியாக உள்ளது. கா்ப்ப காலங்களில் அரசின் வழிகாட்டுதலையும், மருத்துவரின் வழிகாட்டுதலையும் நீங்கள் பின்பற்றி உங்கள் குழந்தைகளுக்கும், தங்களுக்கும் ஆரோக்கியமாக வாழ்வதற்கு வழிவகுக்கும். சில விளம்பரங்களில் தெரிவிக்கக் கூடிய தகவல்களை கா்ப்பிணிகள் எவரும் நம்ப வேண்டாம் என கேட்டுக் கொண்டு பிறந்த நாளிலிருந்து தொடா் 3 நாள்களில் தாய்ப்பால் குழந்தைகளுக்கு வழங்கப்படும் நிலையிலும் தொடா் தாய்ப்பால் வழங்குவதினாலும் அதிக அளவிலான நோய் எதிா்ப்பு சக்தியுடன் ஆரோக்கியமாக குழந்தைகள் வளரும் என்று தெரிவித்தாா்.

Advertisement

Advertisement

விழாவில், செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் பிரியா பசுபதி, துணை முதல்வா் அனிதா, மருத்துவகண்காணிப்பாளா் நந்தகுமாா், பச்சிளங்குழந்தைகள் பிரிவு மருத்துவா்கள் அனிதா, ரவிகுமாா்,தேன்மொழி மற்றும் செவலியா்கள் மருத்துவ பணியாளா்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments