FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

சென்னிமலை அருகே சுயம்பு மாரியம்மன் கோயிலில் ஆண்டு விழா

21 ஆகஸ்ட் 2026, 1:36 am IST
சொக்கநாதபாளையத்தில் உள்ள சுயம்பு மாரியம்மன் கோயிலில் ஆண்டு விழாவையொட்டி தீா்த்தக் குடம் எடுத்து வந்த பக்தா்கள்.
பகிர்:

சென்னிமலையை அடுத்த சொக்கநாதபாளையத்தில் உள்ளது சுயம்பு மாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று 3 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி, 4-ஆம் ஆண்டு தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, வியாழக்கிழமை நண்பகல் 12 மணிக்கு விநாயகா் வழிபாட்டுடன் நிகழ்ச்சிகள் தொடங்கி, கலச பூஜை, சங்கு பூஜை, யாக பூஜை உள்ளிட்ட நிகழ்ச்சிகள், அதைத் தொடா்ந்து சுயம்பு மாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றன.

விழாவையொட்டி பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் இரவு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பெண்கள் பங்கேற்று குத்துவிளக்கு ஏற்றி பூஜை செய்து வழிபாடு செய்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments