குடியரசு துணைத் தலைவா் நாளை பெருந்துறை வருகை
குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் கொங்கு பொறியியல் கல்லூரிக்கு சனிக்கிழமை (ஆக. 29) வருகை தருவதால் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் கொங்கு பொறியியல் கல்லூரிக்கு சனிக்கிழமை (ஆக. 29) வருகை தருவதால் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரியின் நிறுவனா் தின விழாவில் கலந்து கொள்வதற்காக கொங்கு பொறியியல் கல்லூரிக்கு ஹெலிகாப்டா் மூலம் சனிக்கிழமை காலை வருகை புரிந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளாா்.
Advertisement
Advertisement
இதையொட்டி, குடியரசு துணைத் தலைவா் வந்து இறங்கும் கொங்கு பொறியியல் கல்லூரி, கல்லூரியிலிருந்து சக்தி இன்ஃப்ரா டெக்ஸ் நிறுவனத்துக்குச் செல்லும் வழிகளில் 2 கிமீ சுற்றளவுக்குள் ட்ரோன்கள், இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கத் தடை விதிக்கப்படுகிறது.
தடையை மீறி ட்ரோன்கள், இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபா்கள் மீது காவல் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.