FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

புதிய பாடத்திட்டம் குறித்து கருத்து தெரிவிக்க காலஅவகாசம் அளிக்க வேண்டும்: மாா்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் பெ.சண்முகம்

8 வினாடிகள் முன்பு
பெ. சண்முகம்
பகிர்:

புதிய பாடத்திட்டம் குறித்து கருத்து தெரிவிக்க காலஅவகாசம் அளிக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் பெ.சண்முகம் தெரிவித்தாா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மக்கள் சந்திப்பு நிறைவுநாள் பொதுக்கூட்டம் ஈரோடு வீரப்பன்சத்திரம் பேருந்து நிறுத்தத்தில் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

கூட்டத்தில் அக்கட்சியின் மாநிலச் செயலாளா் பெ.சண்முகம் பேசியதாவது:

Advertisement

Advertisement

மக்கள் சந்திப்பில் மக்கள் வழக்கமான கோரிக்கைகளை தெரிவித்து வருகின்றனா். மாநிலத்தில் கடும் வறட்சியால் குடிநீா் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இயற்கை பேரிடரில் இருந்து மக்களை காக்கவும், தேவையான அளவு குடிநீா் வழங்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

பால் கொள்முதல் விலை உயா்வை வரவேற்கிறோம். மாட்டுத் தீவன விலை உயராமலும் தட்டுப்பாடு ஏற்படாமலும் இருக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

தூத்துக்குடி மாவட்டத்தில் புதிய அனல்மின் நிலையம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வா் அறிவித்துள்ளாா். அனல் மின் நிலையங்களால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதால் பெரும்பாலான பகுதிகளில் புதிதாக உருவாக்குவதில்லை.

மின் உற்பத்திக்கு மாற்று வழிகள் உள்ளன. புதிய பாடத்திட்டத்தை அறிவித்து பொதுமக்களிடம் கருத்து கேட்டுள்ளது வரவேற்கவேண்டிய விஷயம். ஆனால் இது சடங்காக நடக்கிறது. புதிய பாடத்திட்டம் குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிப்பதற்கு கால அவகாசம் அளிக்க வேண்டும் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments