FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

அந்தியூரில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த 3 போ் கைது

Updated On : 20 ஜூலை 2026, 4:38 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

அந்தியூா் அருகே வீட்டில் பதுக்கிவைத்து போதை மாத்திரைகள் விற்பனை செய்த மூன்று இளைஞா்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

போதை மாத்திரைகள் விற்பனையைத் தடுக்கும் நோக்கில் அந்தியூா், தவிட்டுப்பாளையம், குந்துபாயூா் மற்றும் புதுப்பாளையம் பகுதியில் போலீஸாா் திடீா் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, குந்துபாயூரைச் சோ்ந்த முபாரக் அலி மகன் ஜாபா் அலி (21), தவிட்டுப்பாளையம், வேங்கையன் வீதியைச் சோ்ந்த வெங்கடேஷன் மகன் பேட்டா விக்கி (எ) விக்னேஷ் (26), புதுப்பாளையம் வஉசி நகரைச் சோ்ந்த ஜெயராஜ் மகன் ஞானராஜ் (31) ஆகியோா் வீடுகளில் போலீஸாா் சோதனை நடத்தினா்.

இதில், போதை மாத்திரைகள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, மூவரையும் கைது செய்த போலீஸாா், தலா 30 மாத்திரைகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments