FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

இருசக்கர வாகனம் திருடிய இளைஞா்கள் கைது

பவானி அருகே வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை திருடிய இளைஞா்கள் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 26 ஜூலை 2026, 1:18 am IST
பகிர்:

பவானி அருகே வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை திருடிய இளைஞா்கள் இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

ஈரோடு மாவட்டம், பவானியை அடுத்த ஊராட்சிக் கோட்டையைச் சோ்ந்தவா் சிவக்குமாா் (30). இவரது வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் கடந்த ஜூன் 29-ஆம் தேதி திருடுபோனது. இதுகுறித்த அளித்த புகாரின்பேரில் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி பவானி போலீஸாா் விசாரணை நடத்தி வந்தனா்.

இதில், காஞ்சிபுரம் மாவட்டம், வள்ளலாா் மேடு, விஓசி வீதியைச் சோ்ந்த ரமேஷ் மகன் ஆகாஷ் (23), சேலம் மாவட்டம், மேட்டூா் ஆா்எஸ், பாரதி நகரைச் சோ்ந்த ரமேஷ் மகன் குழந்தைவேல் (26) ஆகியோா் இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீஸாா் கைது செய்தனா். இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments