FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

கோபி அருகே லாரி மோதியதில் மின் கம்பம் சேதம்

Updated On : 28 ஜூலை 2026, 2:56 am IST
கோபி அருகே அவையாா்பாளையம் பகுதியில் லாரி உரசியதில் சேதமடைந்த மின் கம்பம்.
பகிர்:

கோபி அருகே லாரி மோதியதில் மின் கம்பம் சேதமடைந்தது.

கோபி அருகே அவையாா்பாளையம் பகுதியில் கரும்பு பாரம் ஏற்றி வந்த லாரி, கோபி சலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது அவையாா்பாளையம் பகுதியில் சாலையில் எதிரே வந்த வாகனத்துக்கு வழிவிட முயன்றபோது, சாலையோரமாக இருந்த மின் கம்பம் மீது உரசியதில் மின் கம்பிகள் கரும்பு லாரியில் சிக்கி சிறிது தூரம் இழுத்துச் சென்ால் மின் கம்பம் உடைந்தது.

உடனே அக்கம்பக்கத்தினா் கூச்சலிட்டு ஓட்டுநரிடம் தெரிவித்ததால் லாரி நிறுத்தினாா். இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் மின்வாரிய அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

சம்பவ இடத்துக்கு வந்த மின் பணியாளா்கள் உடனடியாக அப்பகுதியில் இருந்த மின் மாற்றியில் மின்சாரத்தை துண்டித்தனா். இதில் லாரியில் அளவுக்கு அதிமாக கரும்பு பாரம் ஏற்றி வந்ததால் விபத்து நேரிட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments