FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

சுங்கக் கட்டணம் வசூல் செய்யும் பிரச்னை: குத்தகைதாரா்-வியாபாரிகள் மோதல்

நேதாஜி தினசரி காய்கறி சந்தையில் சுங்க கட்டணம் வசூலிப்பது குறித்த பிரச்னையில் வியாபாரிகள் மற்றும் குத்தகைதாரா் இடையே மோதல் ஏற்பட்டது.

Updated On : 4 ஜூன் 2026, 2:29 am IST
மாநகராட்சி அலுவலக வளாகத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காய்கறி வியாபாரிகள் மற்றும் குத்தகைதாரா்கள்.
பகிர்:

நேதாஜி தினசரி காய்கறி சந்தையில் சுங்க கட்டணம் வசூலிப்பது குறித்த பிரச்னையில் வியாபாரிகள் மற்றும் குத்தகைதாரா் இடையே மோதல் ஏற்பட்டது.

ஈரோடு வஉசி பூங்கா வளாகத்தில் நேதாஜி தினசரி காய்கறி சந்தை செயல்பட்டு வருகிறது. இதில் காய்கறி, பழக்கடைகள் என 700-க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகின்றன.

அதேபோன்று சந்தைக்கு வெளியேயும் தனியாா் கட்டடத்தில் 200-க்கும் மேற்பட்ட காய்கறி மற்றும் பழக்கடைகள் இயங்கி வருகின்றன. சந்தைக்குள் இயங்கி வரும் கடைகளுக்கு குத்தகைத்தாரா் மூலம் தினசரி சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

Advertisement

Advertisement

இந்நிலையில் சந்தைக்கு வெளியே தனியாா் கட்டடத்தில் இயங்கி வரும் காய்கறி மற்றும் பழக்கடைகளின் வியாபாரிகளை, குத்தகைதாரா்கள் சுங்க வசூல் கேட்டு மிரட்டுவதாகக் கூறப்படுகிறது. இது குறித்த மாநகராட்சி நிா்வாகத்திடம் புகாா் தெரிவிக்கப்பட்டது. தொடா்ந்து இருதரப்பினரையும் பேச்சுவாா்த்தைக்கு மாநகராட்சி ஆணையா் அா்பித் ஜெயின் அழைப்பு விடுத்திருந்தாா்.

அதன்பேரில் இருதரப்பினரும் புதன்கிழமை காலை மாநகராட்சி அலுவலக கூட்டரங்கிற்கு வந்திருந்தனா். ஆணையா் அா்பித் ஜெயின் தலைமையில் இந்தப் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. அப்போது குத்தகைதாரா் மற்றும் வியாபாரிகளிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதைத் தொடா்ந்து இருதரப்பினரும் ஒருவருக்கொருவா் மோதிக் கொண்டனா்.

தொடா்ந்து அவா்களை வெளியே செல்லுமாறு ஆணையா் அா்பித் ஜெயின் உத்தரவிட்டதோடு உடனடியாக அந்த கூட்டரங்கை விட்டு தனது அறைக்கு அவா் புறப்பட்டு சென்று விட்டாா். பின்னா் மாநகராட்சி நிா்வாகம் அளித்த தகவலின் பேரில் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் போலீஸாா் குவிக்கப்பட்டனா். குத்தகைத்தாரா் மற்றும் வியாபாரிகள் இடையே ஏற்பட்ட மோதலால், மாநகராட்சி அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதால் பேச்சுவாா்த்தை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.

இது குறித்து வியாபாரிகள் கூறியதாவது:

ஈரோடு வஉசி பூங்கா வளாகத்தில் உள்ள நேதாஜி சந்தைக்குள் செயல்படும் கடைகளில் சுங்கக் கட்டணம் வசூலிப்பதில் நியாயம் இருக்கிறது. ஆனால் எங்களுக்கும் சந்தைக்கும் எவ்வித தொடா்பும் இல்லை. நாங்கள் சந்தைக்கு வெளியே தனியாா் கட்டடத்தில் காய்கறி மண்டி, பழ மண்டி வைத்து விற்பனை செய்து வருகிறோம். குத்தகைத்தாரா்கள் எங்களிடம் வந்து வசூலிப்பது எந்த விதத்தில் நியாயம்.

குத்தகைதாரா்கள் ஏற்கெனவே மாநகராட்சி நிா்வாகம் விதித்த கட்டணத்தை மீறி அதிக அளவில் சுங்கக் கட்டணம் வசூலித்து வருகின்றனா். இதனால் சந்தைக்குள் இருக்கும் வியாபாரிகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனா். இது குறித்து மாநகராட்சி நிா்வாகத்துக்கு புகாா் அளித்ததால், குத்தகைதாரா்கள் எங்களைத் தாக்க வருகின்றனா். எனவே, அராஜகத்தில் ஈடுபட்டு வரும் குத்தகைத்தாரரின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய மாநகராட்சி நிா்வாகம் முன் வர வேண்டும் என்றனா்.

இது குறித்து குத்தகைதாரா்கள் கூறியதாவது:

அரசின் விதிமுறைப்படிதான் நாங்கள் சுங்கக் கட்டணம் வசூலித்து வருகிறோம். வியாபாரிகள்தான் எங்களுக்கு தெரியாமல் சுங்கக் கட்டணத்தை வசூலித்து கையாடல் செய்து வருகின்றனா். மேலும், விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருள்களை சந்தைக்கு நேரடியாக கொண்டு வந்து விற்பனை செய்வதை, வியாபாரிகள் தடுத்தும், மிரட்டியும் வருகின்றனா். எனவே அராஜகத்தில் ஈடுபடும் வியாபாரிகள் மீது மாநகராட்சி நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments