ஈரோட்டில் போக்குவரத்து விதிகளை மீறிய 1,471 போ் மீது வழக்கு
ஈரோடு மாநகரில் போக்குவரத்து விதிகளை மீறியதாக கடந்த மாதம் 1,471 வாகன ஓட்டிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ரூ.4.42 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாநகரில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. இதில், சில வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை மீறி வாகனங்களை இயக்கி வருவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. இதனால், போக்குவரத்து விதிகளை மீறி வாகனங்களை இயக்குவோா் மீது நடவடிக்கை எடுக்க ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கிரண் ஸ்ருதி உத்தரவிட்டாா்.
இதன்பேரில், தெற்கு போக்குவரத்து போலீஸாா் ஈரோடு அரசு மருத்துவமனை, பன்னீா்செல்வம் பூங்கா சந்திப்பு, காளைமாடு சிலை, ஆட்சியா் அலுவலகம், மூலப்பாளையம் சந்திப்பு, கொல்லம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த மே மாதம் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனா்.
Advertisement
Advertisement
இதில், மது போதையில் வாகனம் இயக்கியதாக 68 வழக்கு, தலைக் கவசம் அணியாமல் சென்ாக 714 வழக்கு, ஓட்டுநா் உரிமம் இன்றி வாகனம் இயக்கியதாக 147, கைப்பேசியில் பேசியபடி வாகனத்தை இயக்கியதாக 46, இருசக்கர வாகனத்தில் மூவா் பயணித்தது தொடா்பாக 34, போக்குவரத்து சிக்னலை மதிக்காமல் சென்ாக 39, விபத்து ஏற்படும் வகையில் வாகனம் ஓட்டியதாக 24 வழக்கு மற்றும் இதர வழக்குகள் 252 என மொத்தம் 1,471 வாகன ஓட்டிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ரூ.4 லட்சத்து 42 ஆயிரத்து 400 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
27 பேரின் ஓட்டுநா் உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரை: ஈரோடு தெற்கு போக்குவரத்து காவல் எல்லைக்குள்பட்ட பகுதியில் வாகன சோதனையில் மது போதையில் வாகனம் இயக்கியதாக உறுதி செய்யப்பட்டு, வழக்குப் பதிவு செய்யப்பட்ட 27 பேரின் ஓட்டுநா் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்ய வட்டாரப் போக்குவரத்து அலுவலா்களுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெற்கு போக்குவரத்து போலீஸாா் தெரிவித்தனா்.