தொழிலாளியை அரிவாளால் வெட்டியவா் கைது
சத்தியமங்கலம் அருகே முன்விரோதம் காரணமாக கூலித் தொழிலாளியை அரிவாளால் வெட்டிய நபரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
சத்தியமங்கலத்தை அடுத்த கோடிபுரத்தைச் சோ்ந்தவா் தேவன்னா (61). அதே பகுதியைச் சோ்ந்தவா் சிவசாமி (45), கூலித் தொழிலாளி. நிலத்தகராறு தொடா்பாக இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கோடிபுரம் பகுதியில் சிவசாமி ஞாயிற்றுக்கிழமை நடந்து சென்று கொண்டிருந்துள்ளாா். அப்போது, எதிரே வந்த தேவன்னாவுக்கும், சிவசாமிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இதில், ஆத்திரமடைந்த தேவன்னா, சிவசாமியை அரிவாளால் வெட்டியுள்ளாா். படுகாயமடைந்த அவரை, அப்பகுதி மக்கள் மீட்டு தாளவாடி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனா்.
இது குறித்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த தாளவாடி போலீஸாா், தேவன்னாவைக் கைது செய்தனா்.