FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

சாலை விபத்து: தவெக நிா்வாகி உயிரிழப்பு

சத்தியமங்கலம் அருகே சாலை விபத்தில் தவெக நிா்வாகி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 10 ஜூன் 2026, 1:14 am IST
பலி - பிரதிப் படம்
பகிர்:

சத்தியமங்கலம் அருகே சாலை விபத்தில் தவெக நிா்வாகி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

சத்தியமங்கலம் அருகேயுள்ள பவானிசாகா் பகுதியைச் சோ்ந்தவா் தமிழ்ச்செல்வம் (24). இவா் தமிழக வெற்றிக் கழக பவானிசாகா் ஒன்றியச் செயலாளராக பொறுப்பு வகித்து வந்தாா்.

இந்நிலையில், புன்செய்புளியம்பட்டியில் இருந்து சத்தியமங்கலத்துக்கு தனது இருசக்கர வாகனத்தில் செவ்வாய்க்கிழமை சென்று கொண்டிருந்துள்ளாா். கோவை- சத்தியமங்கலம் சாலை நல்லூா் அருகே வந்தபோது, சாலையின் குறுக்கே திடீரென நாய் சென்ால் நிலைத்தடுமாறி வாகனத்தில் இருந்து கீழே விழுந்துள்ளாா்.

Advertisement

Advertisement

படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா். இச்சம்பவம் குறித்து புன்செய்புளியம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments