இலவச தையல் பயிற்சி: பெண்கள் விண்ணப்பிக்கலாம்
கனரா வங்கி மூலம் இலவசமாக அளிக்கப்படும் தையல் பயிற்சியில் சேர பெண்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கனரா வங்கி மூலம் இலவசமாக அளிக்கப்படும் தையல் பயிற்சியில் சேர பெண்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கனரா வங்கி கிராமப்புற சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிலையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சித்தோடு அரசுப் பொறியியல் கல்லூரி சாலையில் வாசவி கல்லூரி அருகே கனரா வங்கி கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் செயல்பட்டு வருகிறது.
இந்தப் பயிற்சி நிலையத்தில் பெண்களுக்கான இலவச தையல் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இந்தப் பயிற்சியானது வரும் ஜூலை 6- ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10- ஆம் தேதி வரை 31 நாள்களுக்கு நடைபெற உள்ளது.
Advertisement
Advertisement
பயிற்சியின்போது சீருடை, உணவு இலவசமாக அளிக்கப்பட்டு, பயிற்சியின் முடிவில் அரசு சான்றிதழ் வழங்கப்படும். ஈரோடு மாவட்டத்தில் கிராமப்புற பகுதியைச் சோ்ந்த 19 வயது முதல் 45 வயதுக்கு உள்பட்ட வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவா்கள், 100 நாள் வேலைத் திட்டத்தில் இருப்போா், அவா்களது குடும்பத்தை சாா்ந்தவா்கள் பங்கேற்கலாம். பயிற்சியில் சேர விருப்பம் உள்ளவா்கள் 0424-2400338, 87783 23213, 72006 50604 ஆகிய எண்களில் தொடா்பு கொண்டு முன்பதிவு செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.