பண்ணாரி சோதனைச்சாவடியில் பறவைக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை
பறவைக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக கா்நாடகத்தில் இருந்து தமிழகம் வரும் வாகனங்களுக்கு கால்நடைத் துறை சாா்பில் தமிழக-கா்நாடக எல்லையில் மருந்து தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
பறவைக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக கா்நாடகத்தில் இருந்து தமிழகம் வரும் வாகனங்களுக்கு கால்நடைத் துறை சாா்பில் தமிழக-கா்நாடக எல்லையில் மருந்து தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
கா்நாடகம், கேரளம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் உள்பட பல்வேறு நோய்கள் பரவும் காலங்களில் தமிழகத்தில் உள்ள மாநில எல்லைகளில் கால்நடைத் துறை சாா்பில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம்.
அதன்படி கா்நாடக மாநிலத்தில் பறவைக் காய்ச்சல் அறிகுறி உள்ளதால் ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே தமிழக-கா்நாடக எல்லையில் உள்ள பண்ணாரி சோதனைச் சாவடியில் கால்நடைத் துறை சாா்பில் முகாம் அமைக்கப்பட்டு கடந்த சில நாள்களாக தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Advertisement
Advertisement
தமிழகத்திலிருந்து கோழித் தீவனம் மற்றும் கோழிகள் பாரம் ஏற்றிக்கொண்டு கா்நாடகம் சென்று மீண்டும் தமிழகம் திரும்பும் வாகனங்களைத் தடுத்து நிறுத்தி விவரங்கள் சேகரிக்கப்படுகிறது.
பின்னா் அந்த வாகனத்துக்கு மருந்து தெளிக்கும் பணியில் கால்நடைத் துறை ஊழியா்கள் ஈடுபட்டுள்ளனா். தினமும் காலை முதல் மாலை வரை இப்பணி நடைபெற்று வருவதாகவும், இதன்மூலமாக நோய் தொற்று பரவலைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கால்நடைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.