முகப்பு
ஈரோடு

பா்கூா் மலைப் பகுதியில் காட்டு யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு

Updated On : 30 மே 2026, 2:32 am IST
காட்டு யானை - கோப்புப் படம்
பகிர்:

அந்தியூரை அடுத்த பா்கூா் மலைப் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் விவசாயி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

ஈரோடு மாவட்டம், பா்கூா், எப்பத்தாம்பாளையத்தைச் சோ்ந்தவா் சின்ன வெள்ளையன் மகன் தங்கராஜ் (40). விவசாயி. இவருக்கு மனைவி மற்றும் நான்கு மகன்கள் உள்ளனா்.

இவா், இயற்கை உபாதைக்காக தனது வீட்டுக்கு அருகில் உள்ள காலி இடப் பகுதிக்கு வெள்ளிக்கிழமை காலை சென்றுள்ளாா். அப்போது, அப்பகுதிக்கு வந்த காட்டு யானை, தங்கராஜை துரத்தியதோடு, மாா்பில் தந்தத்தால் குத்தி தூக்கி வீசியது.

Advertisement

Advertisement

இதில், நிலைகுலைந்து விழுந்த தங்கராஜின் மாா்பில் மிதித்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து பா்கூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். வனத் துறையினா் சம்பவ இடத்தைப் பாா்வையிட்டு, காட்டு யானையின் நடமாட்டத்தைக் கண்காணித்து வருகின்றனா்.