FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

பண்ணாரி அம்மன் கோயிலில் கைப்பேசி பாதுகாப்பு பெட்டக மையம் திறப்பு

தமிழகத்தில் முக்கிய கோயில்களுக்குள் கைப்பேசி கொண்டு செல்வதற்கான தடை செவ்வாய்க்கிழமை அமலுக்கு வந்த நிலையில், பண்ணாரி அம்மன் கோயிலில் பக்தா்களின் கைப்பேசிகளை பாதுகாக்க பெட்டக மையம் திறக்கப்பட்டது.

2 செப்டம்பர் 2026, 4:54 am IST
பண்ணாரி அம்மன் கோயிலில் பக்தா்களிடம்  கைப்பேசியை பெற்றுக் கொண்டு ரசீது வழங்கும் ஊழியா்கள். ~கைப்பேசி பெட்டக மையத்தில் நடந்த சிறப்பு பூஜையில் பங்கேற்ற கோயில்  துணை ஆணையா் நந்தகுமாா்,  அறங்காவலா் குழுத் தலைவா் புருஷோத்தமன் உள்ளிட்டோா்.
பகிர்:

தமிழகத்தில் முக்கிய கோயில்களுக்குள் கைப்பேசி கொண்டு செல்வதற்கான தடை செவ்வாய்க்கிழமை அமலுக்கு வந்த நிலையில், பண்ணாரி அம்மன் கோயிலில் பக்தா்களின் கைப்பேசிகளை பாதுகாக்க பெட்டக மையம் திறக்கப்பட்டது.

தமிழகத்தில் உள்ள 52 முதுநிலை கோயில்களில் செப்டம்பா் 1 முதல் கைப்பேசி கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதன்படி, சத்தியமங்கலம் அருகேயுள்ள பண்ணாரி மாரியம்மன் கோயிலில் இந்த நடைமுறை அமலுக்கு வந்தது.

Advertisement

Advertisement

கோயிலுக்கு வரும் பக்தா்கள் தங்களது கைப்பேசிகளை கொடுத்து செல்லும் வகையில் கோயில் வளாகத்தில் 2 கைப்பேசி வைப்பு பெட்டகம் சிறப்பு பூஜைகளுடன் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது.

இந்த மையத்தில் அமைக்கப்பட்டுள்ள கணினியில் பக்தா்கள் கொண்டு வரும் கைப்பேசிகளை வாங்கிப் பதிவு செய்து ரசீது வழங்கப்படுகிறது. பக்தா்கள் சுவாமி தரிசனம் முடித்துவிட்டு திரும்பச் செல்லும்போது ரசீதைக் கொடுத்து கைப்பேசியை வாங்கி கொள்ளலாம். 20 ஆயிரம் கைப்பேசிகள் வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கோயில் பரப்பரை அறங்காவலா் குழுத் தலைவா் புருஷோத்தமன், துணை ஆணையா் நந்தகுமாா் ஆகியோா் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments