FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

நீலகிரியில் தொடங்கியது வன விலங்குகள் கணக்கெடுப்புப் பணி

நீலகிரி மாவட்டத்தில் வன விலங்குகள் கணக்கெடுப்புப் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

24 ஜனவரி 2024, 10:11 pm IST
பகிர்:

நீலகிரி மாவட்டத்தில் வன விலங்குகள் கணக்கெடுப்புப் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

 நீலகிரி வடக்கு வனக்கோட்டத்தில் சுமார் 52,000 ஹெக்டேர் பரப்பளவிலும், நீலகிரி தெற்கு வனக் கோட்டத்தில் 32,000 ஹெக்டேர் பரப்பளவிலும், கூடலூர் வனக்கோட்டத்தில் 11,000 ஹெக்டேர் பரப்பளவிலும் இந்தக் கணக்கெடுப்புப் பணி நடத்தப்படுகிறது. கூடலூர் வனக்கோட்டத்தில் வனத் துறைக்கு சொந்தமான பகுதிகள் மட்டுமின்றி செக்ஷன் 17-க்குள்பட்ட நிலங்களிலும், தனியார் தோட்டங்களிலும் இக்கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

 இந்த கணக்கெடுப்புக்காக நீலகிரி வடக்கு வனக்கோட்டம் 82 பகுதிகளாகவும், நீலகிரி தெற்கு வனக்கோட்டம் 32 பகுதிகளாகவும், கூடலூர் வனக்கோட்டம் 26 பகுதிகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. நேரடி பதிவு, நீராதாரங்களில் பதிவு, கால்தடங்கள், ஜிபிஎஸ் கருவியுடன் கூடிய பதிவு உள்பட பல்வேறு நிலைகளாக இந்த கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

Advertisement

Advertisement

 இப்பணியில் வனத் துறையினர் மற்றும் தன்னார்வலர்கள் உள்பட சுமார் 250 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இவர்கள் சேகரிக்கும் அனைத்து விவரங்களும் மாவட்ட வன அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்ட பின்னர் விவரங்கள் ஒப்பீடு செய்யப்பட்டு சரிபார்க்கப்படும். அதன்பின்னரே வன விலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதா போன்ற விவரங்கள் தெரியவரும்.

 உதகையில் தெற்கு வனக்கோட்டத்தில் கேர்ன்ஹில் காப்புக்காட்டுக்கு உள்பட்ட பகுதிகளில் இந்த கணக்கெடுப்புப் பணியை தெற்கு கோட்ட வனச்சரகர் ராஜேஷ் தொடங்கி வைத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments