முதுமலை புலிகள் காப்பகத்தில் புலிகள் கணக்கெடுப்பு துவக்கம்
நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பக உள்வட்டப் பகுதியில் புலிகள் கணக்கெடுப்பு பணி செவ்வாய்க்கிழமை துவங்கியது.
நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பக உள்வட்டப் பகுதியில் புலிகள் கணக்கெடுப்பு பணி செவ்வாய்க்கிழமை துவங்கியது.
ஆண்டுதோறும் நடைபெறும் புலிகள் கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக காப்பகத்தின் உள்வட்ட பகுதியில் புலிகள் கணக்கெடுப்பு பணி துவங்கப்பட்டது. இதில் 19 குழுக்களாகப் பிரிந்து 90 பேர் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வோர் குழுவிலும் ஒரு வனப் பணியாளர் குழுவை வழிநடத்தி அழைத்து செல்வார். தடயங்கள் மற்றும் எச்சங்கள், கால் தடம் ஆகியவற்றை சேகரித்து அடையாளம் கண்டு அட்டவணைப் படுத்தப்படும். இந்தப் பணியில் வனத் துறை பணியாளர்கள், வேட்டைத் தடுப்புக் காவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.