ஹெத்தையம்மன் பண்டிகை: நீலகிரிக்கு டிசம்பர் 26 இல் உள்ளூர் விடுமுறை
ஹெத்தையம்மன் பண்டிகையையொட்டி நீலகிரி மாவட்டத்துக்கு டிசம்பர் 26 ஆம்தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹெத்தையம்மன் பண்டிகையையொட்டி நீலகிரி மாவட்டத்துக்கு டிசம்பர் 26 ஆம்தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளதாவது:
ஹெத்தையம்மன் பண்டிகையையொட்டி நீலகிரி மாவட்டத்தில் அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு டிசம்பர் 26 ஆம்தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.
இதற்கு பதிலாக 2019 ஜனவரி 5 ஆம்தேதி பணி நாளாக செயல்படும். இந்த விடுமுறை நாள் செலாவணி முறிச்சட்டத்தின்படி வராது என்பதால் உள்ளூர் விடுமுறை அறிவிக்கும்போது மாவட்டத்திலுள்ள கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்கள் அரசுப் பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் வகையில் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.